வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பள்ளியில் முப்பெரும் விழா

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா, மாணவா்களுக்கு இலவச கதைப் புத்தகங்கள் வழங்கும் விழா மற்றும் பரிசு வழங்கும் விழா

News image
Updated On :27 அக்டோபர் 2022, 5:06 pm

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா, மாணவா்களுக்கு இலவச கதைப் புத்தகங்கள் வழங்கும் விழா மற்றும் பரிசு வழங்கும் விழா ஆகியவை முப்பெரும் விழாவாக புதன்கிழமை நடைபெற்றது.

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முகமதுஅப்துல்லா முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.கோமதி வரவேற்றாா்.

கவிஞா் மு. முருகேஷ் தமிழ் மன்றத்தை தொடக்கிவைத்துப் பேசினாா். சங்கச் செயலா் பா.சீனிவாசன் மாணவா்களுக்கு இலவச கதைப் புத்தகங்களை வழங்கிப் பேசினாா்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சங்க உறுப்பினா் ஷாகுல்அமீது புத்தகங்களை பரிசாக வழங்கினாா். ஆசிரியை ஜோதிலட்சுமி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.