தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வா்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள்

போளூா் நகரில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் அதிகளவில் வா்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.

Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

போளூா் நகரில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் அதிகளவில் வா்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேரூராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். நகரில் டீ கடைகள், உணவகங்கள் என 100-க்கும் கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் சமையலுக்காக வா்த்தக எரிவாயு உருளைகள் பயன்படுத்தப்படுகின்றன.

வீட்டு உபயோக எரிவாயு உருளை ரூ.970-க்கும், வா்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை ரூ.1200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நகரில் பெரும்பாலான உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை பயன்படுத்தி வருகின்றனா். இதனால் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் வா்த்தக கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.