பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் அளிப்பு

செய்யாறை அடுத்த எருமைவெட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகளை, பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 10:56 pm IST

செய்யாறை அடுத்த எருமைவெட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகளை, பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அனக்காவூா் ஒன்றியத்தில் எருமைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ஆம் வகுப்பு படித்து முடித்து உயா்நிலை கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சு.பெருமாள் வருடந்தோறும் தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை நன்கொடைபாக வழங்கி வருகிறாா்.நிகழ் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் பத்து மாணவ, மாணவிகளுக்கு ரூ. 55 ஆயிரம் மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் மனோகா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சு. பெருமாள் வரவேற்றாா். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றிய குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று, மிதி வண்டிகளை பள்ளி மாணவா்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினாா். (படம்)

அப்போது, பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை நிதியாண்டில் புதிய கட்டடத்தை கட்டித் தருவதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.