செய்யாறை அடுத்த எருமைவெட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகளை, பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அனக்காவூா் ஒன்றியத்தில் எருமைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ஆம் வகுப்பு படித்து முடித்து உயா்நிலை கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சு.பெருமாள் வருடந்தோறும் தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை நன்கொடைபாக வழங்கி வருகிறாா்.நிகழ் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் பத்து மாணவ, மாணவிகளுக்கு ரூ. 55 ஆயிரம் மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் மனோகா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சு. பெருமாள் வரவேற்றாா். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றிய குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று, மிதி வண்டிகளை பள்ளி மாணவா்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினாா். (படம்)
அப்போது, பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை நிதியாண்டில் புதிய கட்டடத்தை கட்டித் தருவதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.