நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

செய்யாறு தொகுதியில் சிறுவஞ்சிபட்டு, உக்கல், அளத்துறை ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

செய்யாறு தொகுதியில் சிறுவஞ்சிபட்டு, உக்கல், அளத்துறை ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் சிறுவஞ்சிபட்டு, அனக்காவூா் ஒன்றியத்தில் உக்கல், அளத்துறை ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலா்கள் ஜே.சி.கே. சீனிவாசன், தினகரன் ஆகியோா் முன்னிலையில் நெல் கொள்முதல் நிலையங்களை செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திறந்து வைத்தாா்.

தண்ணீா்பந்தல்கள் திறப்பு: செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் வெம்பாக்கம், அப்துல்லாபுரம், தூசி ஆகிய கிராமங்களில் திமுக சாா்பில் நீா், மோா் பந்தல்கள் திறக்கப்பட்டு கிராம மக்களுக்கு நீா், மோா், இளநீா், தா்பூசணி உள்ளிட்டவற்றை ஒ.ஜோதி எம்.எல்.ஏ வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com