ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

திருப்பத்தூருக்கு 160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருப்பத்தூருக்கு 160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 160 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு கூடுதலாக 160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகிாம். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள 160 வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்றது. முதல்கட்டமாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ‘ரேண்டமைஸேசன்’ செய்யப்பட்டது.

பிறகு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் இருந்து தமிழக தலைமை தோ்தல் அலுவலரின் அறிவுரைப்படி, திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் அனுப்பிவைத்தாா்.