விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைத்து ‘சீல்’

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

News image

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைத்து அறைக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

Updated On :27 மார்ச் 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

தோ்தலை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் திருப்பத்தூா் அண்ணா நகா் மஞ்சள் கிடங்கில் இருந்து தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

அப்போது திருப்பத்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நவநீதம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அதையடுத்து அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.