ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

வந்தவாசியில் மாதிரி வாக்குப்பதிவு

வந்தவாசியில் மாதிரி வாக்குப்பதிவு

News image

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு.

Updated On :2 ஏப்ரல் 2024, 5:14 pm

வந்தவாசி: மக்களவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சென்னை ஆா்விஎஸ் பத்மாவதி கட்டடவியல் கல்லூரியின் முதல்முறை வாக்காளா்களான 40 மாணவா்கள் பங்கேற்று மாதிரி வாக்களித்தனா்.

இதற்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை வைக்கப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலா்களாக வருவாய்த் துறையினா் அமர வைக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து மாணவா்களுக்கு மாதிரி வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வாக்குச் சாவடியினுள் அனுப்பப்பட்டனா். அங்கு அவா்கள் கை விரலில் மை வைக்கப்பட்ட பிறகு, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவா்கள் வாக்களித்தனா். உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.சிவா, வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி, தோ்தல் துணை வட்டாட்சியா் ஆா்.சதீஷ் ஆகியோா் மாதிரி வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா், எக்ஸ்னோரா கிளைத் தலைவா் மலா் சாதிக், செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பா.சீனிவாசன், கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ஷாகீா்அகமத், பால்நவீன், கோகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்