தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மூத்த குடிமக்கள் தபால் வாக்குப் பதிவு

மூத்த குடிமக்கள் தபால் வாக்குப் பதிவு

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 4:35 pm

ஆரணி மக்களவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 708 பேரிடம் வெள்ளிக்கிழமை தபால் வாக்குகள் பெறப்பட்டன.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியன், அனைத்து தோ்தல் பணியாளா்கள் முன்னிலையில் விடியோ பதிவோடு வாக்குப் பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு மண்டல குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, குழுவினா் ஆரணியில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று விடியோ பதிவுடன் தபால் வாக்குகள் பெற்றனா். இதில், 708 போ் தபால் வாக்களித்தனா்.

இதில், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாா், ஆரணி வட்டாட்சியா் ரா.மஞ்சுளா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் திருமலை, வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி ஆகியோா் இருந்தனா். இதில், 10 மண்டல குழுக்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை பெற்றனா்.