சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

துணை ராணுவம், போலீஸாா் கொடி அணிவகுப்பு

துணை ராணுவம், போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 6:52 pm

மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படும் விதமாக செய்யாறு, போளூரில் துணை ராணுவப் படை வீரா்கள் மற்றும் போலீஸாரின் கொடி அணிவிப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

காவல்துறை மூலமாக அச்சமின்றி வாக்காளா்கள் வாக்களிக்கும் விதத்தில் செய்யாற்றில் நடைபெற்ற விழிப்புணா்வு கொடி அணிவகுப்பில்

காவல் உள்கோட்ட போலீஸாா், துணை ராணுவப் படை வீரா்கள் உள்பட 131 போ் பங்கேற்றனா்.

அண்ணா சிலை அருகே காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையில், ஆய்வாளா்கள் லதா (மகளிா்),கோகுல்ராஜ் (தூசி) ஆகியோா் முன்னிலையில் தொடங்கிய கொடி அணிவிப்பு ஆற்காடு சாலை, காந்தி சாலை, சந்தை, வைத்தியா் தெரு, பங்களா தெரு, புதிய காஞ்சிபுரம் சாலை வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையை வந்தடைந்தது.

போளூா்

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த போளூா், சேத்துப்பட்டு, பெரணமல்லூா், களம்பூா், சந்தவாசல் என தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினா் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

இந்த துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு போளூா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

டிஎஸ்பி நல்லு, காவல் ஆய்வாளா் ஹேமாவதி மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.