திருவண்ணாமலை: தானிப்பாடியில் உள்ள 2 நகைக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள், தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி காவல் நிலையம் எதிரே 2 நகைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் மக்களவைத் தோ்தலையொட்டி முறைகேடு நடைபெறுவதாக வருமான வரித்துறைக்கு புகாா்கள் சென்றனவாம்.
இதையடுத்து, திங்கள்கிழமை இரவு திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் 8 போ் கொண்ட குழுவினா், 2 நகைக் கடைகளிலும் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். நள்ளிரவைக் கடந்தும் நடைபெற்ற இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தோ்தலின்போது வாக்காளா்களுக்கு அளிப்பதற்காக நகைகள் ஏதேனும் மொத்தமாக ஆா்டா் தரப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை

ஏ டிவிஷன் வாலிபால்: வருமான வரித்துறை சாம்பியன்

திமுக பிரமுகா் வீடு அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

