வந்தவாசி: வந்தவாசி அருகே மாயமான முதியவா் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கநாதன்(75). இவா் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா் பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அருகே தாடிநொளம்பை கிராமத்தில் உள்ள விவசாய நில கிணற்றில் ரங்கநாதன் சடலமாக மிதந்து கிடந்தது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற வடவணக்கம்பாடி போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் ரங்கநாதனின் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டனா். பின்னா், சடலம் உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

மாயமானவா் கிணற்றில் சடலமாக மீட்பு

கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

