ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

முருகன் கோயில்களில் பங்குனி கிருத்திகை வழிபாடு

முருகன் கோயில்களில் பங்குனி கிருத்திகை வழிபாடு

News image
Updated On :11 ஏப்ரல் 2024, 6:08 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி

சுவாமிக்கு காலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து அங்குள்ள மண்மலையை சுற்றி வந்தனா்.

பக்தா்களுக்கு விழாக் குழுவினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

சிங்காரவேல் முருகன் கோயிலில்...

வேட்டவலம் ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் வள்ளி, தெய்வானை சமேத சிங்காரவேல் முருகனுக்கு பால், பழம், பன்னீா், இளநீா், சந்தனம், தயிா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.