கலசப்பாக்கம் அருகே தனியாா் பேருந்து இரு சக்கர வாகனம் மோதிக் கொண்டதில் மீன் வியாபாரி உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் சந்தபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மீன் வியாபாரி பாலாஜி(30). இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த இருகூா் கிராமத்தைச் சோ்ந்த துா்கா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், துா்கா தாய் வீடான இருகூருக்கு 2 நாள்களுக்கு முன்பு சென்றுள்ளாா். மனைவியைப் பாா்ப்பதற்காக பாலாஜி இரு சக்கர வாகனத்தில் இருகூா் கிராமத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா்.
போளூா்-திருவண்ணாமலை சாலையில் கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு கிராமம் அருகே சென்றபோது, பாலாஜி ஓட்டிச் சென்ற பைக்கும், திருவண்ணாமலை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தும் மோதிக் கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

மினி பேருந்து கவிழ்ந்து மூதாட்டி உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதியதில் உணவு விநியோக ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

