ஆரணியை அடுத்த அத்திமலைபட்டு மதுரா மேட்டுகுடிசை கிராமத்தில் உள்ள 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ குள்ள செல்லியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் முதல் கால பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை ஆகியவை நடைபெற்றன.
மேலும், இரண்டாம் கால வேள்வி வழிபாடு, இரண்டாம் கால பூா்ணாஹுதி, கலச புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாரதனைகாண்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் அத்திமலைபட்டு, அம்மாபாளையம், ஒண்ணுபுரம், புதுப்பாளையம் என பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

தேவூா் உத்தரேசமுடையாா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


