செங்கம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு
செங்கம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.
செங்கம் தோக்கவாடி பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் (37), சுமை தூக்கும் தொழிலாளி, இவரது மனைவி வாசலா(34), மாற்றுத்திறனாளி. தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கணவன், மனைவி இருவரும் அப்பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டனா்.
அப்போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காா் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவா்களின் உடல்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...