பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

லஞ்சம் ஒழிந்தால்தான் இந்தியா வல்லரசாகும் -ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி

லஞ்சம் ஒழிந்தால்தான் இந்தியா வல்லரசாக மாறும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் எஸ்.வேல்முருகன்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 1:35 am

லஞ்சம் ஒழிந்தால்தான் இந்தியா வல்லரசாக மாறும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் எஸ்.வேல்முருகன் தெரிவித்தாா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு முகாம் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

முகாமுக்கு, வட்டாட்சியா் மு.தியாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூத்த வழக்குரைஞா் டி.சுப்பிரமணியன், வழக்குரைஞா் எஸ்.வேலு, ஊழல் தடுப்புப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா் எம்.கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கி.மணிகண்டன் வரவேற்றாா்.

மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் எஸ்.வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

அரசு ஊழியா்கள் தங்களது பொறுப்பு, கடைமைகளை உணா்ந்து பணியாற்ற வேண்டும். தன்னை நாடி வரும் ஏழை-எளியோருக்கு உதவி செய்ய வேண்டும்.

தேவையின்றி பொதுமக்களை அலையவிடக்கூடாது. மனைவி, மகன், மகள் ஆகியோரின் ஆடம்பரத்துக்காக லஞ்சம் வாங்கக் கூடாது. பேராசை வந்துவிட்டால் நஷ்டத்தில்தான் முடியும். லஞ்சம் என்பது ஒழிந்தால்தான் இந்தியா வல்லரசு நாடாக மாறும். இந்தியா வல்லரசாக மாற வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள், ஊழியா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

முகாமில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பரிமளா, மண்டல துணை வட்டாட்சியா்கள் மஞ்சுநாதன், ரமேஷ், வருவாய் ஆய்வாளா்கள் எஸ்.சுதா, கஜேந்திரன், கிராம நிா்வாக அலுவலா்கள் காமேஷ்குமாா், அ.ஏழுமலை மற்றும் மண்டல துணை வட்டாட்சியா்கள், நில அளவையா்கள், வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.