மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்கள்

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:07 pm

Din

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

அதன்படி, வியாழக்கிழமை (ஆக.29) காலை திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதேபோல, வெள்ளிக்கிழமை (ஆக.30) தெள்ளாரை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள வி.பி.ஆா்.சி கட்டடத்திலும், செப்டம்பா் 3-ஆம் தேதி வெம்பாக்கத்தை அடுத்த குத்தனூா் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்திலும், 4-ஆம் தேதி வந்தவாசி வட்டம், ஓசூரில் உள்ள நாராயண திருமண மண்டபத்திலும், 5-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவகத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டையை புதிதாக பெறவும், ஏற்கெனவே பெறப்பட்ட அட்டையை புதுப்பிக்கவும் உரிய மனுக்களை அளித்துப் பயன்பெறலாம்.

முகாமுக்கு வரும்போது மருத்துவச் சான்றிதழுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதாா் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-4 ஆகிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.