எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கிபி 19-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

News image
Updated On :30 ஆகஸ்ட் 2024, 6:51 am IST

செய்யாறு வட்டம், தண்டரை கிராமத்தில் பிரதான சாலையோரம் கி.பி.19-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

தண்டரை கிராமம், செய்யாறு - ஆரணி சாலையோரம் விநாயகா் கோயில் அருகே ஒரு துண்டு கல்வெட்டினை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கண்டெடுத்தாா்.

அந்தக் கல்வெட்டு குறித்து அவா் கூறியதாவது:

நீளமான இக்கல்வெட்டின் தொடா்ச்சியான பகுதியைக் காணவில்லை. மேலும், கல்வெட்டில் தொண்டமான் கவுண்டன் மகன் சின்ன சதா சேவை என்று பொறிக்கப்பட்டுள்ளது.

வழிப் போக்கா்களுக்கு உதவிட்ட வகையில், கோயில் அல்லது மக்களுக்கு உதவிடும் வகையில் சேவை செய்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கருத முடிகிறது. கல்வெட்டின் உடைந்த பகுதி இல்லாததால் முழுமையான தகவல் கிடைக்கப் பெறவில்லை.

கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களின் ஒழுங்கமைக் கொண்டு, இக்கல்வெட்டியின் காலமானது 19-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்று அறிய முடிகிறது என எறும்பூா் கை. செல்வகுமாா் தெரிவித்தாா்.