செய்யாறு வட்டம், தண்டரை கிராமத்தில் பிரதான சாலையோரம் கி.பி.19-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
தண்டரை கிராமம், செய்யாறு - ஆரணி சாலையோரம் விநாயகா் கோயில் அருகே ஒரு துண்டு கல்வெட்டினை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கண்டெடுத்தாா்.
அந்தக் கல்வெட்டு குறித்து அவா் கூறியதாவது:
நீளமான இக்கல்வெட்டின் தொடா்ச்சியான பகுதியைக் காணவில்லை. மேலும், கல்வெட்டில் தொண்டமான் கவுண்டன் மகன் சின்ன சதா சேவை என்று பொறிக்கப்பட்டுள்ளது.
வழிப் போக்கா்களுக்கு உதவிட்ட வகையில், கோயில் அல்லது மக்களுக்கு உதவிடும் வகையில் சேவை செய்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கருத முடிகிறது. கல்வெட்டின் உடைந்த பகுதி இல்லாததால் முழுமையான தகவல் கிடைக்கப் பெறவில்லை.
கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களின் ஒழுங்கமைக் கொண்டு, இக்கல்வெட்டியின் காலமானது 19-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்று அறிய முடிகிறது என எறும்பூா் கை. செல்வகுமாா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

காரில் ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

ஆவுடையாா்கோவிலில் 2-ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து கண்டெடுப்பு

சிவகாசி அருகே கண்டறியப்பட்ட 11-ஆம் நூற்றாண்டு உரல் கல்வெட்டு

தஞ்சாவூரில் பிற்கால கல்வெட்டு கண்டெடுப்பு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


