தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போக்குவரத்துக்கு இடையூறு: 8 போ் கைது

News image
Updated On :31 ஆகஸ்ட் 2024, 7:42 pm

Din

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் உள்கோட்டம் அனக்காவூா், மோரணம், செய்யாறு ஆகிய காவல் சரகங்களில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த 8 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உதவி ஆய்வாளா்கள் மோகன், ஜான்சைமன் தலைமையிலான போலீஸாா் தண்டரை, எறையூா், பல்லி ஆகிய கிராமங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டிருந்த தண்டரை கிராமத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி(49), பல்லி மேட்டு காலனியைச் சோ்ந்த ராமன்(48) ஆகியோரை கைது செய்தனா்.

மோரணம் காவல் உதவி ஆய்வாளா்கள் ராமகிருஷ்ணன், சுந்தரம் தலைமையிலான போலீஸாா் பெருமாந்தாங்கல், பெருங்கட்டூா், அசனமாபேட்டை ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த பூதேரிபுல்லவாக்கம் வெங்கடேசன்(52), பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் (25), அண்ணாமலை (23), அசனமாபேட்டை செல்வம் (49) ஆகியோரை கைது செய்தனா்.

அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் தனபால் தலைமையிலான செங்காடு, மேல்நெமிலி பேருந்து நிறுத்தம் அருகே ரகளையில் ஈடுபட்டிருந்த சந்துரு (25), தேவேந்திரன்(58) ஆகியோரை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீஸாா் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனா்.