காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) காலை வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
காா்த்திகை மாத பௌா்ணமி சனிக்கிழமை (டிசம்பா் 14) மாலை 4.17 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) பிற்பகல் 3.13 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இந்த நிகழ்வைக் காண வந்த பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இவா்கள் தொடா்ந்து, சனிக்கிழமை காலை முதல் மாலை வரை கிரிவலம் வந்தபடியே இருந்தனா்.
மாலை 4.17 மணிக்கு பௌா்ணமி தொடங்கியதும் கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வரை திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
இவா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா், அருணாசலேஸ்வரா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் நலன் கருதி தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்!

வைகாசி பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம்

வைகாசி மாத அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் திரளான பக்தா்கள் புனித நீராடல்

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி கிரிவலம் தொடக்கம்: பல லட்சம் பக்தா்கள் குவிந்தனா்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



