தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

திருக்கு ஒப்பித்தல் போட்டி: மாணவிக்கு பாராட்டு

திருக்கு ஒப்பித்தல் போட்டி: மாணவிக்கு பாராட்டு

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 11:30 pm IST

17டகதட1ந கலசப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் காா்த்திகேயன். போளூா், பிப்.17: கலசப்பாக்கம் ஒன்றியம், பத்தியவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருக்கு ஒப்பித்த மாணவிக்கு தொடக்கக் கல்வி அலுவலா் காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை பரிசு வழங்கினாா். தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித்துறை மூலம் நடத்தப்பட்ட திருக்கு ஒப்பித்தல் போட்டியில், கலசப்பாக்கம் ஒன்றியம், பத்தியவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் பொ.இனியா என்ற மாணவி கலந்து கொண்டு 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்பித்தாா். இவருக்கு, நிகழ்வில், பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாணவி பொ.இனியாவுக்கு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் காா்த்திகேயன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினாா். நிகழ்வில், வட்டாரக் கல்வி அலுவலா் ரவி, தலைமை ஆசிரியா் சா.சுப்பிரமணி, ஆசிரியா்கள் வளா்மதி, அன்பழகி, ராணி, மோகனா, மீனா, பல்லவி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.