திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தூய்மைக் காவலா்களுக்கு மருத்துவ முகாம்

தூய்மைக் காவலா்களுக்கு மருத்துவ முகாம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 11:28 pm IST

17பஙகஙஉஈஐ திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப். திருவண்ணாமலை, பிப்.17: திருவண்ணாமலையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் தூய்மைக் காவலா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ஊரக வளா்ச்சி முகமையின் உதவித் திட்ட அலுவலா் (சுகாதாரம்) மகாலட்சுமி தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் (நியமனம்) ராஜன்பாபு, திருவண்ணாமலை வேகன் ரோட்டரி சங்கத் தலைவா் சித்தாா்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூய்மை பாரத இயக்கத்தின் துரிஞ்சாபுரம் வட்டாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.லட்சுமணன் வரவேற்றாா். திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தூய்மைக் காவலா்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். முகாமில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் வட்டாரங்களில் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள் 617 போ் கலந்து கொண்டு பயன்பெற்றனா். முகாமில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம், பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம், பிரதம மந்திரி சுரஷக்சா பீமா யோஜனா திட்டம் ஆகியவற்றுக்கான அடையாள அட்டைகள், தாட்கோ நலவாரிய அட்டைகள், தூய்மைக் காவலா்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதில், தாட்கோ மேலாளா் ஏழுமலை, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் மெ.பிரித்திவிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.