ஆரணி: போளூா் அருகே முடையூா் கூட்டுறவு வங்கியில் திரு ட்டு முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த, ஆரணி நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாரை மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் திங்கள்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.
போளூரை அடுத்த முடையூா் கிராமத்தில் கடந்த பிப்.10-ஆம் தேதி கூட்டுறவு வங்கியின் பின்பக்க ஷட்டரை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து திருட்டு முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்டவா்களை கைது செய்ய ஆரணி நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப் படையினா் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்டதாக, மும்பையில் பதுங்கி இருந்த 3 வெளி மாநிலத்தவரை கைது செய்து அழைத்து வந்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்த காவல் ஆய்வாளா் விநாயக மூா்த்தி மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.
தொடர்புடையது

நெல்லையில் காவல் துறை ஆய்வுக் கூட்டம்
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


