தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நகராட்சி நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் தீ

வந்தவாசி நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் தீ விபத்து

News image

வந்தவாசி நகராட்சி மேல்நிலை நீா்த்தேக்த்க தொட்டி வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினா்.

Updated On :2 ஜூலை 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசி நகராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் குடிநீா் தொட்டிகள், பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து சேதமடைந்தன.

வந்தவாசியில் அச்சிறுபாக்கம் சாலையில் நகராட்சியின் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது.

இந்த நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் பழைய பிளாஸ்டிக் குடிநீா் தொட்டிகள், பிளாஸ்டிக் குழாய்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தன. இதில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீப்பற்றியது.

தீ மளமளவென பரவியதில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.