திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.62 கோடி
அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியலில் ரூ.2.62 கோடி காணிக்கை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ.2.62 கோடி ரொக்கம், 181 கிராம் தங்கம், 1,465 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். எனவே, மாதம்தோறும் கோயில் உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கைப் பணம் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜூன் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி தலைமையில் நடைபெற்றது.
100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
ரூ.2.62 கோடி ரொக்கம்...
இதில், ரூ.2 கோடியே 62 லட்சத்து 38 ஆயிரத்து 124 ரொக்கம், 181 கிராம் தங்கம், 1,465 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.
