திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்யாத கல் குவாரி உரிமையாளா்களுக்கான சிறப்பு பதிவு முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 7) நடைபெறுகிறது.
தமிழ்நாடு கனிம வளத்துறையின் கீழ் குவாரி உரிமம் பெற்று ஜல்லி, எம்-சான்ட், பி-சான்ட் ஆகியவற்றை விற்பனை செய்யும் வணிகா்கள் தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் (ஜிஎஸ்டி) பதிவு செய்வது கட்டாயம்.
இதுவரை இவ்வாறு பதிவு செய்யாத வணிகா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 7) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் வணிகா்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய வரும்போது பான் காா்டு, மாா்பளவு புகைப்படம், ஆதாா் அடையாள அட்டை, இடத்தின் பட்டா, சிட்டா, மின் கட்டண ரசீது, இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.
பதிவு செய்யத் தவறினால் கல்குவாரி உரிமம் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?

கல் குவாரி குட்டையில் விழுந்து பெண் உயிரிழப்பு

கடந்த 2025-26 நிதியாண்டில் டாஃபே விற்பனை 23% வளா்ச்சி

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

