
Updated On :8 மார்ச் 2024, 5:22 pm

ஆரணி அருகே ரூ.1.68 கோடியில் உயா்நிலைப் பள்ளி கட்டட பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.68 கோடியில் உயா்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்வில், ஊராட்சித் தலைவா் கற்பகம் சுப்பிரமணி, அதிமுக ஒன்றிய செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் மோகன், குமரன், பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் யுவராஜ், பள்ளி தலைமையாசிரியா் கஸ்தூரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...