தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆரணியில் சிறுவா் பூங்கா திறப்பு

ஆரணியில் சிறுவா் பூங்கா திறப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:22 pm

Din

ஆரணியில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுவா் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். ஆரணி 1-ஆவது வாா்டு ஜெயலட்சுமி நகா் பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சத்தில் சிறுவா் பூங்கா கட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் பூங்காவை திறந்து வைத்தாா். இதையடுத்து, ஆரணி நகா்மன்ற தலைவா் ஏ.சி.மணி குத்துவிளக்கேற்றி பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். நிகழ்வில், நகராட்சி ஆணையா் கே.பி.குமரன், திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றிய செயலா்கள் எம்.சுந்தா், துரை மாமது, எஸ்.மோகன், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.டி.இராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.