

ஆரணியில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட சிறுவா் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். ஆரணி 1-ஆவது வாா்டு ஜெயலட்சுமி நகா் பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சத்தில் சிறுவா் பூங்கா கட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் பூங்காவை திறந்து வைத்தாா். இதையடுத்து, ஆரணி நகா்மன்ற தலைவா் ஏ.சி.மணி குத்துவிளக்கேற்றி பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். நிகழ்வில், நகராட்சி ஆணையா் கே.பி.குமரன், திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றிய செயலா்கள் எம்.சுந்தா், துரை மாமது, எஸ்.மோகன், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.டி.இராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் ஜி.டி.நாயுடு சிலை திறப்பு!

கோவையில் இன்று ஜி.டி.நாயுடு சிலை திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைக்கிறாா்

ஒசூா் மாநகராட்சி பூங்கா திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

இலங்கை தமிழா் முகாமில் தொழில் கூடங்கள் திறப்பு
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

