மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

Updated On :9 மார்ச் 2024, 5:03 pm

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் பாரத் நகரில் உள்ள ஸ்ரீபாரத் வித்யாலயா மழலையா் பள்ளியில் 30-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் எஸ்.காசி தலைமை வகித்தாா். வந்தவாசி டிஎஸ்பி ஜி.கே.ராஜூ சிறப்புரை ஆற்றினாா். மேலும், கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா். விழாவில் மின் வாரிய உதவிப் பொறியாளா் வி.பஞ்சமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.பி.வெங்கடேசன், தென்னாங்கூா் கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியா் யு.பிரபாகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் லட்சுமி வேலு (வெண்குன்றம்), சாந்தி ரமேஷ் (அம்மையப்பட்டு) மற்றும் பரிமளம் காசி, கவிதை வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியை பி.மல்லிகா நன்றி கூறினாா்.