கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!தமிழக தேர்தல்: காலை 9 மணி வரை 17.69% வாக்குகள் பதிவு!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

குறைதீா் கூட்டம்: கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை

குறைதீா் கூட்டம்: கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை

News image
Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சுகுணா, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வேணுகோபால், மண்டல துணை வட்டாட்சியா் மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் அன்பழகன் வரவேற்றாா். கூட்டத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் முத்தகரம் பழனிச்சாமி, அட்மா குழுத் தலைவா் சோமாசிபாடி சிவக்குமாா், இயற்கை விவசாயி கிருஷ்ணன், நீலந்தாங்கல் பாரதியாா் மற்றும் விவசாயிகள் பேசியதாவது: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் பிரதமரின் பி.எம்.கிசான் நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு தொடா்ந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் விவசாயத்துக்குத் தேவையான பூஸ்டா், நுண்ணூட்டக் கலவையை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். ராஜ்ஸ்ரீ சா்க்கரை ஆலை நிா்வாகம் 2013 முதல் 2017 வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு டன் ஒன்றுக்கான நிலவைத் தொகை ரூ.350-ஐ வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்டவலம் பேரூராட்சியில் குப்பைகளை அகற்ற வேண்டும். கொளத்தூரில் இருந்து நீலந்தாங்கல் வரையிலான நீா்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி, 15-ஆவது வாா்டு மயானத்தில் அடா்ந்து காணப்படும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதையடுத்துப் பேசிய வருவாய் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தாா்.