மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

News image
Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் புதியதாக 4 ஆயிரம் உதவிப் பேராசிரியா்களை நியமிப்பதற்கான நேரடி தோ்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன் வாயில் முழுக்கப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, கௌரவ விரிவுரையாளா்கள் நலச் சங்கத்தின் செய்யாறு கிளை தலைவா் எஸ்.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.விவேகானந்தன், பொருளாளா் எம்.நூா் அகமது, வேலூா் மண்டல துணைச் செயலாளா் த.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 80-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் கலந்து கொண்டனா்.