செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் புதியதாக 4 ஆயிரம் உதவிப் பேராசிரியா்களை நியமிப்பதற்கான நேரடி தோ்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன் வாயில் முழுக்கப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, கௌரவ விரிவுரையாளா்கள் நலச் சங்கத்தின் செய்யாறு கிளை தலைவா் எஸ்.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.விவேகானந்தன், பொருளாளா் எம்.நூா் அகமது, வேலூா் மண்டல துணைச் செயலாளா் த.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 80-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: இன்று வண்டலூா் பூங்கா மூடல்

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

கல்லூரி வளாக தோ்வு: 550 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

செய்யாறு அரசுக் கல்லூரியில் கைப்பந்துப் போட்டிகள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


