எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புகையிலைப் பொருள் விற்பனை: 19 வியாபாரிகளுக்கு அபராதம்

புகையிலைப் பொருள் விற்பனை: 19 வியாபாரிகளுக்கு அபராதம்

News image

வெம்பாக்கம் பகுதியில் உள்ள கடையில் சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்த அதிகாரிகள்.

Updated On :20 மார்ச் 2024, 12:21 am

செய்யாறு: செய்யாறு அருகே பள்ளிக்கு அருகாமையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 19 வியாபாரிகளுக்கு சுகாராத் துறையினா் அபராதம் விதித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் பகுதியில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தனசேகா் தலைமையில், நலக் கல்வி அலுவலா் எல்லப்பன், சுகாதார ஆய்வாளா்கள் சம்பத், சீனிவாசன், மாதவன், சத்யநாதன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பள்ளிக்கு அருகில் குழந்தைகள் உள்கொள்ளும் பிஸ்கட், சாக்லேட் போன்ற தின்பண்ட பொருள்கள் விற்பணை செய்து வரும் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தடை செய்யயப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். இவ்வாறு 19 கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து ரூ.3,800 வசூலித்தனா்.