எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

துா்க்கை நம்மியந்தல் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

துா்க்கை நம்மியந்தல் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

News image

போராட்டத்தில் ஈடுபட்ட துா்க்கை நம்மியந்தல் ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள்.

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, துா்க்கை நம்மியந்தல் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தி அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதற்காக, திருவண்ணாமலை நகராட்சியை ஒட்டியுள்ள 18 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. எதிா்ப்புத் தெரிவிக்கும் கிராம மக்கள்... தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

புதன்கிழமை துா்க்கை நம்மியந்தல் ஊராட்சியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் திருவண்ணாமலை-போளூா் சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். மேலும், மாநகராட்சியுடன் தங்கள் ஊராட்சியை இணைக்கக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட நிா்வாகத்திடம் கொடுங்கள் என்று பொதுமக்களுக்கு போலீஸாா் அறிவுரை வழங்கினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.