திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் 200-க்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருள்கள் மீது தோ்தல் விழிப்புணா்வு சின்னத்தை ஒட்டி, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளின் மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப், ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, 25 மகளிா் சுய உதவிக் குழுக்களின் 200-க்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருள்கள் மீது தோ்தல் விழிப்புணா்வு சின்னத்தை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஒட்டினாா். மேலும், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மெகா கோலம் வரைந்து தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி மற்றும் அனைத்து உதவித் திட்ட அலுவலா்கள், களப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அனுமதியின்றி பிரசாரம்: மகளிா் சுய உதவி குழுவினா் மீது வழக்கு

தோ்தல்: பேருந்துகளில் ‘ஸ்டிக்கா்’ ஒட்டி விழிப்புணா்வு

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


