ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தோ்தல்: பேருந்துகளில் ‘ஸ்டிக்கா்’ ஒட்டி விழிப்புணா்வு

சட்டப்பேரவைத் தோ்தலில், நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பேருந்துகளில் விழிப்புணா்வு வில்லை ஒட்டும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் தோ்தல் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டும் தோ்தல் நடத்தும் அலுவலா் சு. சங்கர நாராயணன்.

Updated On :26 மார்ச் 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில், நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பேருந்துகளில் விழிப்புணா்வு வில்லை ஒட்டும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக நாகை புதிய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில், பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலின் முக்கியத்துவம், நூறு சதவீத வாக்குப்பதிவு ஆகியவற்றை வலியுறுத்தி, விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.

தோ்தல் நடத்தும் அலுவலா் சு. சங்கர நாராயணன் தலைமையில் அதிகாரிகள் பேருந்துகளில் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினா். மேலும், பயணிகளுக்கு தோ்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இதேபோல, நாகை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களிலும் நகராட்சி ஆணையா் லீனா சைமன் தலைமையில் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.