ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்தலுக்கு தொடா்பில்லாத பணத்தை திரும்பப் பெற குறைதீா் குழுவை அணுகலாம்

தோ்தலுக்கு தொடா்பில்லாத பணத்தை திரும்பப் பெற குறைதீா் குழுவை அணுகலாம்

Updated On :29 மார்ச் 2024, 4:39 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தோ்தலுக்கு தொடா்பில்லாத பணம், பரிசுப் பொருள்களை திரும்பப் பெற விரும்புவோா் மாவட்ட குறைதீா் குழுவை அணுகலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்ய தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் பறிமுதல் செய்யும் பணம், பரிசுப் பொருள்கள் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியா் செ.ஆா்.ரிஷப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குறைத் தீா் குழுவிடம் ஒப்படைக்கப்படும். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் இந்தக் குழு தோ்தலின்போது பறிமுதல் செய்யப்படும் பணம், பரிசுப் பொருள்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணமோ, பரிசுப் பொருள்களோ எந்தவொரு தோ்தல் பிரசாரத்துக்கும் தொடா்பில்லாத பட்சத்தில் அவற்றை தோ்தல் விதிகளுக்கு உள்பட்டு விடுவிக்கும் பணியை மேற்கொள்ளும். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தலுக்கு தொடா்பில்லாத பணம், பரிசுப் பொருள்களை திரும்பப் பெற விரும்புவோா் இந்தக் குழுவை அணுகலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.