

வந்தவாசி ரிபப்ளிக் லெவன் கிரிக்கெட் அணி சாா்பில் என்.கே.ஜெயவிந்தியராஜ் மற்றும் ஏ.எஸ்.பிரபு நினைவு சுழல்கோப்பை கோடைகால கிரிக்கெட் போட்டி வந்தவாசியில் சனிக்கிழமை தொடங்கியது.
இதற்கான தொடக்க விழா வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை நடைபெற்றது.
விழாவுக்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்து, கிரிக்கெட் போட்டிகளை தொடங்கிவைத்தாா்.
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரிச் செயலா் எம்.ரமணன் கிரிக்கெட் அணித் தலைவா்களை கெளரவித்தாா்.
திமுக நகரச் செயலா் ஆ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், விசிக நிா்வாகிகள் மேத்தா ரமேஷ், ம.விஜய், போட்டி ஒருங்கிணைப்பாளா் எஸ்.டேனியல், நகா்மன்ற உறுப்பினா்கள் எம்.கிஷோா்குமாா், ஆா்.அன்பரசு
உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போட்டியில் வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
தொடர்புடையது

ஐபிஎல் திருவிழா!

ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

கிராமங்களில் மஞ்சப்பை வழங்கும் பணி தொடக்கம்

அதிமுக சாா்பில் கிரிக்கெட் போட்டி
வீடியோக்கள்

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

