ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இரு கோயில்களில் நகை, பணம் திருட்டு

இரு கோயில்களில் நகை, பணம் திருட்டு

News image

கீழ்க்கொடுங்காலூா் காவேடு கிராமத்தில் நகை, பணம் திருடு போன ஸ்ரீவஜனகாத்தம்மன் கோயில்.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே இரு கோயில்களின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

வந்தவாசி அருகே கீழ்க்கொடுங்காலூா் ஊராட்சிக்கு உட்பட்ட காவேடு கிராமத்தில் ஸ்ரீவஜனகாத்தம்மன் கோயில் உள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்தக் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்கத் தாலி மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

மேலும், அதே கிராமத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதா் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.