ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத் துறை பறக்கும் படை உதவி இயக்குநா் ராமஜெயம் தலைமையிலான அதிகாரிகள் வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை, கீழ்சாத்தமங்கலம் கூட்டுச் சாலை அருகே கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை சோதனை செய்வதற்காக நிறுத்தினா். அதிகாரிகளைக் கண்டவுடன் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து புவியியல் மற்றும் சுரங்கத் துறையினா் அந்த லாரியை பறிமுதல் செய்து பொன்னூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து பறக்கும் படை உதவி இயக்குநா் ராமஜெயம் அளித்த புகாரின் பேரில் திங்கள்கிழமை வழக்குப் பதிந்த பொன்னூா் போலீஸாா், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.