நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சாலையோரம் மரக்கன்று நட ஆய்வு

சாலையோரம் மரக்கன்று நட ஆய்வு

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

போளூா்: விரிவாக்கம் செய்யப்பட்ட எட்டிவாடி - ஆரணி சாலையோரம் மற்றும் சாலை நடுவே மலா் பூக்கும் செடியை நட மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பழனிவேல் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் (படம்).

முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2022-2023ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த எட்டிவாடி முதல் ஆரணி வரை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் பணி நடைபெற்றது.

இந்தப் பணியின்போது சாலையோரம் இருந்த புளிய மரம், ஆலமரம், அரச மரம் என பல்வேறு வகை சாா்ந்த மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதனால் மீண்டும் சாலையோரம் மற்றும் மைய தடுப்புச் சுவருக்கு இடையில் மலா் பூக்கும் செடியை நட வும், இரவு நேர பிரதிபலிப்பான் ஸ்டிக்கா் அமைக்கவும் மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பழனிவேல் ஆய்வு மேற்கொண்டாா்.

உதவி கோட்டப் பொறியாளா் பா.திருநாவுக்கரசு, உதவிப் பொறியாளா் ம.வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் உடனிருந்தனா்.