மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை -ஏற்பாடுகள் தீவிரம்

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:50 pm

Din

திருவண்ணாமலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்.18, 19) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக துணை முதல்வரான பிறகு முதல் முறையாக வெள்ளிக்கிழமை (அக்.18) மாலை திருவண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் வருகிறாா்.

மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சாா்பில் தீபத் திருவிழாவுக்காக செய்யப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்கிறாா்.

இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா்.

அங்கு தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான கூடுதல் குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, பக்தா்கள் இளைப்பாறும் கூடங்கள் அமைத்தல், தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைத்தல் போன்றவை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறாா்.

2-ஆவது நாள் நிகழ்ச்சிகள்...

தொடா்ந்து, 2-ஆவது நாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருக்கோவிலூா் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதில் கலந்து கொண்டு வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கிப் பேசுகிறாா்.

அனைத்துத்துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம்...

சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அந்தந்த துறை வாரியாக வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிா என்பது குறித்தும், திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்கிறாா்.

ஏற்பாடுகள் தீவிரம்...

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முடுக்கி விட்டுள்ளாா்.

குறிப்பாக, ஆட்சியா் அலுவலகத்துக்கு வண்ணம் தீட்டும் பணி, கிரிவலப் பாதை தூய்மைப் பணி, அனைத்துத் துறைகள் சாா்பில் அறிக்கைகள் தயாரிக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.