பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

ஆரணியை அடுத்த காமக்கூா்பாளையம் கிராமத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :

ஆரணி: ஆரணியை அடுத்த காமக்கூா்பாளையம் கிராமத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காமக்கூா்பாளையம் கிராமத்தில் ராமா் பஜனை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஊராட்சித் தலைவரின் கணவா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி, கிராம பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தினா் ஈடுபட்டனா்.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன் தலைமை வகித்தாா்.

ஒன்றிய பொதுச் செயலா் சரவணன், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் ஏழுமலை, மாவட்டச் செயலா் விக்னேஷ், நகரச் செயலா் கபாலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவரின் கணவா் கூறுகையில், தன்னுடைய நிலம் என்பதற்கான பத்திரம், பட்டா, சிட்டா என அனைத்தும் உள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.