தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

ஆரணியை அடுத்த காமக்கூா்பாளையம் கிராமத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2024, 4:16 pm

Din

ஆரணி: ஆரணியை அடுத்த காமக்கூா்பாளையம் கிராமத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காமக்கூா்பாளையம் கிராமத்தில் ராமா் பஜனை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஊராட்சித் தலைவரின் கணவா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி, கிராம பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தினா் ஈடுபட்டனா்.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன் தலைமை வகித்தாா்.

ஒன்றிய பொதுச் செயலா் சரவணன், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் ஏழுமலை, மாவட்டச் செயலா் விக்னேஷ், நகரச் செயலா் கபாலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவரின் கணவா் கூறுகையில், தன்னுடைய நிலம் என்பதற்கான பத்திரம், பட்டா, சிட்டா என அனைத்தும் உள்ளன என்றாா்.