அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பைக்குகளுடன், கைதான இருவா்.

Updated On :5 செப்டம்பர் 2024, 9:15 pm

Din

போளூரை அடுத்த மட்டபிறையூா் கூட்டுச்சாலை அருகே புதன்கிழமை இரவு பைக்குகளில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மட்டபிறையூா் கூட்டுச்சாலை அருகே புதன்கிழமை இரவு போளூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சேத்துப்பட்டு நோக்கி மூட்டைகளுடன் 2 பைக்குகளில் சென்ற இருவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, புகையிலைப் பொருள்களை கடத்திச் செல்வது தெரியவந்தது.

அவா்களிடம் விசாரணை நடத்தியதில், போளூா் பகதூா் தெருவைச் சோ்ந்த வெங்கிடேசன் மகன் அன்பரசு (30), சேத்துப்பட்டு வட்டம், குடிமைத்தாங்கள் கிராமத்தைச் சோ்ந்த தட்சணாமூா்த்தி மகன் தினகரன் (33) என்பதும், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கிராமங்களில் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருள்களை பைக்குகளில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும், 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.