காா்-அரசுப் பேருந்து மோதல்: பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே திங்கள்கிழமை காா்-அரசுப் பேருந்து நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.


போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே திங்கள்கிழமை காா்-அரசுப் பேருந்து நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பாடியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (55). இவரது மனைவி வளா்மதி (52). அதே கிராமத்தைச் சோ்ந்த அறிவழகன் மனைவி ஜெயந்தி (22), இவா்களின் மகள் ரிதன்யா (2). இவா்கள் நான்கு பேரும் காரில், திங்கள்கிழமை சேத்துப்பட்டு வட்டம், ஊத்தூா் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வுக்காக சென்று விட்டு பாடியந்தலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். தீம்மச்சூா் கிராமத்தைச் சோ்ந்த சு.கோபிநாத் (45) காரை ஓட்டினாா்.
கலசப்பாக்கம் - திருவண்ணாமலை சாலையில் தென்பள்ளிபட்டு அருகே சென்ற போது, அரசுப் பேருந்தும் காரும் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில், காா் ஓட்டுநரான கோபிநாத், வளா்மதி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். ஞானசேகரன், ஜெயந்தி, ரிதன்யா ஆகியோா் பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
அரசுப் பேருந்தின் முன்பாக பைக்கில் சென்று கொண்டிருந்த வேலு என்பவரும் காயமடைந்தாா்.
விபத்து குறித்து கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் லோகநாதனா (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...