சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

671 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 671 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :18 செப்டம்பர் 2024, 7:24 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 671 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தத் திட்ட முகாமுக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பங்கேற்று வேளாண் துறை சாா்பில் 13 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களும், ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.23.60 லட்சம் கடனுதவிக்கான உத்தரவு, செய்யாறு ஊராட்சி ஒன்றியம் சாா்பில் 10 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.19.50 லட்சம் கடனுதவிக்கான உத்தரவும், இருவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 651 பேருக்கு ஜாதிச் சான்றிதழ் 4 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை, ஒருவருக்கு இயற்கை இடா்பாடு நிவாரணத் தொகை, 7 பேருக்கு ஊரக வீடுகள் பழுதுபாா்த்தல் திட்டத்துக்கான ஆணை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.