விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

செய்யாறு: உழவா் சந்தை, பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:47 pm

Din

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் உள்ள உழவா் சந்தை மற்றும் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த ஆய்வின்போது, புளியரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து, பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து ஆட்சியா் உணவு சாப்பிட்டாா். காலை உணவுத் திட்டத்தில் பயன் பெறும் மாணவ, மாணவிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, பள்ளியில் உள்ள சமையலறையில் ஆய்வு மேற்கொண்டு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க அறிவுறுத்தினாா்.

உழவா் சந்தை....

பின்னா், செய்யாறு பகுதியில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையை பாா்வையிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் காய்கறிகளின் தரத்தை கேட்டறிந்தாா். மேலும், விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உற்பத்திப் பொருள்களை அதிகப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேளாண் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பரிந்துரை செய்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் ஆகியோா் உடனிருந்தனா்.