புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கல்லூரியில் பொறியாளா் தின விழா

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:49 pm

Din

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில், பொறியாளா் தின விழா அண்மையில் நடைபெற்றது.

கட்டடவியல் துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரிப் பதிவாளா் இர.சத்தியசீலன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எ.வ.குமரன், கல்லூரி முதல்வா் சி.இளஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்டடவியல் துறைத் தலைவா் இரா.கதிரவன் வரவேற்றாா்.

சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக பேராசிரியா் என்.பன்னீா்செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்டடவியல் துறை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்துறை, தனியாா்துறை, ஏனைய வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

இதில், கட்டடவியல் துறையின் உதவிப் பேராசிரியா் கே.நிவேதா மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.