கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கிணற்றில் திருநங்கை சடலம்

வந்தவாசியில் கிணற்றில் திருநங்கை சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :28 செப்டம்பர் 2024, 6:32 pm

வந்தவாசியில் கிணற்றில் திருநங்கை சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகேயுள்ள கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக வந்த தகவலின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் சனிக்கிழமை காலை அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து வந்தவாசி தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கிணற்றிலிருந்து அந்த சடலத்தை மீட்டனா்.

இதில், கிணற்றில் சடலமாக கிடந்தது திருநங்கை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.