கிணற்றில் திருநங்கை சடலம்

வந்தவாசியில் கிணற்றில் திருநங்கை சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

வந்தவாசியில் கிணற்றில் திருநங்கை சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகேயுள்ள கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக வந்த தகவலின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் சனிக்கிழமை காலை அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து வந்தவாசி தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கிணற்றிலிருந்து அந்த சடலத்தை மீட்டனா்.

இதில், கிணற்றில் சடலமாக கிடந்தது திருநங்கை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com