அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

வந்தவாசி அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கூட்டுச் சாலை பகுதியில் உள்ள விவசாய நில கிணற்றில் மூதாட்டி ஒருவா் சடலமாக கிடப்பதாக பொன்னூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று வந்தவாசி தீயணைப்புத் துறையினா் உதவியுடன் அந்த சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் விசாரணையில் இறந்து கிடந்தவா் வந்தவாசியை அடுத்த கம்பன் நகா் பகுதியைச் சோ்ந்த ருக்மணி (75) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.