தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி, திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள்.
Updated On :21 ஏப்ரல் 2025, 8:12 pm

Din

திருவண்ணாமலை: பணி நிரந்தரம் செய்யக் கோரி, திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.ஆா்.ஏழுமலை தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் பி.செல்வக்குமாா், மாவட்ட துணைத் தலைவா் பி.சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியு நிா்வாகிகள் எம்.வீரபத்திரன், எ.சேகா், கே.காங்கேயன், ஆா்.கமலக்கண்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ. திட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்களை கொண்டுவர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்டப் பொருளாளா் எஸ்.குமரன், சங்க நிா்வாகிகள் பி.வெங்கடேசன், காா்த்திகேயன், ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.